badge

Followers

Saturday 25 October 2014

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...





பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...

காய்கறி வகைகளில் ஒன்றான பூசணியை தொடர்ந்து சமைத்துச் சாப்பிட்டால், நரம்பு தொடர்பான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண், மேகவெட்டை, பிரமேக நோய் போன்றவை உள்ளவர்களுக்கு அவற்றின் தீவிரம் குறையும்.

பூசணி, உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீக்கும். எப்போதும் உடல் வலி இருப்பவர்கள், பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல் வலி நீங்கும். மன நிலை பாதிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும்போது தினசரி பூசணி சேர்த்து சமைத்த உணவைக் கொடுத்தால் நல்ல பலன் கொடுக்கும் என்று கூறப்படுகிறது.

மருத்துவத்தில் பூசணிக்காயின் சதைப் பகுதி, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைச்சுற்றலை நீக்கவும் பயன்படுகிறது. மருத்துவம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுகிறது.

வெண் பூசணிக்காயின் சாறு 30 மில்லி அளவு எடுத்து, ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதயத்துக்குப் பலம் கொடுக்கும். ரத்தம் சுத்தப்படும். பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும்.

உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும். ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப் புழுக்கள் வெளியேறவும், சிறுநீரக நோய்கள், ரத்தம் சுத்தப்படும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லி அளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச் சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் அதை நிறுத்திவிடும்.


No comments:

Post a Comment