badge

Followers

Sunday 10 April 2016

எலுமிச்சையின் நற்குணங்கள்


* எலுமிச்சையில் 84.6 நீர்ச்சத்து இருக்கிறது. வெயில் காலங்களில் தாகத்தைத் தணிக்க இது உதவுகிறது,
* எலுமிச்சை ஜுஸை குடித்து வருவதால் மலேரியா, காலரா போன்ற நோயின் வீரியம் குறையும்.
* முடக்குவாத நோயை சரி செய்யவும், எலும்பு தேய்மான பிரச்சனை இருப்பவர்களின் நோய் தீவிரத்தைக் குறைக்கவும் எலுமிச்சையிலுள்ள வைட்டமின் சி சத்து உதவுகிறது.
* எலுமிச்சைச் சாறை தண்ணீர் கலக்காமல் குடிக்கக்கூடாது. குடித்தால் பல் எனாமல் பாதிப்படையும்.
* வாயில் எச்சில் ஊறுதல், நெஞ்செரிச்சல், செரிமானமின்மை, வாய்க்கசப்பு உள்ளவர்கள் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாறுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட பூரண குணம் கிடைக்கும்.
* பித்தம், வாய்க் கசப்பால் சாப்பாடு பிடிக்காமல் அவதிப்படுபவர்கள் எலுமிச்சை இலை பவுடரை சாதத்தில் கலந்து சாப்பிட்டால் சட்டென்று நலம் பெறுவார்கள்.
* சர்க்கரை நோயாளிகளுக்கு அடிக்கடி தாகம் எடுத்துக் கொண்டே இருக்கும். எலுமிச்சையில் தண்ணீர் சேர்த்துக் குடிப்பது தாகத்தைக் கட்டுப்படுத்தும்.
* மூல வியாதியால் பாதிக்கப்பட்டவர்கள் எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இந்துப்பு (மலை உப்பு) தூவி வாயில் அடக்கிக் கொண்டால், விரைவில் குணமடைவார்கள்.
* மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை எலுமிச்சை ஜுஸ் கொடுத்தால் சோர்வில்லாமல் ஃப்ரெஷ்ஷாக இருப்பார்கள்.

1 comment:

  1. மிகவும் பயனுள்ள தகவல்கள் ... கோடையில் எலுமிச்சை போலவே. :)

    ReplyDelete