badge

Followers

Thursday 6 October 2016

நவராத்திரியின் சிறப்பு





நவராத்திரியின் சிறப்பு
படைத்தல், காத்தல், அழித்தல் எனும் மூன்று சக்திகளைக் கொண்ட அன்னையின் அருள் வேண்டி பூஜை செய்வதே நவராத்திரி வழிபாடாகும்.
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கன்னிகையர்களை பூஜிக்க வேண்டும்.
இக்கன்னியர்களுக்கு குமாரி,
திரிமூர்த்தி,
கல்யாணி,
ரோகிணி,
காளி,
சண்டிகா,
ஸாம்பவி,
துர்க்கா,
சுபத்திரா
என்று பெயர் சூட்டி பூஜிக்க வேண்டும். ஒவ்வொரு கன்னி பூஜைக்கு ஏற்ப பலன்கள் கிடைக்கும்.
🌟 குமாரியைப் பூஜிப்பதால் பகை விலகும், வறுமை நீங்கும், செல்வச் செழிப்பு உருவாகும், ஆயுள் விருத்தியாகும்.
🌟 திரிமூர்த்தியைப் பூஜிப்பதால் தன விருத்தி, தர்ம சிந்தனை விருத்தி ஏற்படும்.
🌟 கல்யாணியைப் பூஜிப்பதால் கல்வியில் வெற்றி, அரச யோகம் கிடைக்கும்.
🌟 ரோகிணியைப் பூஜிப்பதால் வியாதிகள் விலகும்.
🌟 காளியைப் பூஜிப்பதால் பகை தீரும்.
🌟 சண்டிகையைப் பூஜிப்பதால் செல்வம் உண்டாகும்.
🌟 சாம்பவியைப் பூஜிப்பதால் வறுமை நீங்கும், வெற்றி கிட்டும்.
🌟 துர்க்கையைப் பூஜிப்பதால் பகை தீரும், செய்ய முடியாத காரியங்கள் எளிதில் செய்யலாம்.
🌟 சுபத்திரையைப் பூஜிப்பதால் மன நிம்மதி கிட்டும், மங்களம் உண்டாகும்.

3 comments:

  1. படமும், தகவல்களும் மிகவும் அருமையோ அருமையாக உள்ளன.

    பகிர்வுக்கு நன்றிகள்.

    (இது நம் ஆத்து கொலுவா? 9 படிகளுடன் நன்கு அகலமாக சூப்பராக உள்ளது)

    ReplyDelete
  2. வருகைக்கும் ,பின்னூட்டத்துக்கு நன்றி,சார்.
    ஆனால்,இது விக்கிப்பீடியாவில் காட்டப்பட்ட கொலு.அழகாக இருப்பதால் பகிர்ந்தேன்

    ReplyDelete
  3. well very nice
    earnest efforts should be taken by people like you to arrange celebrate navarathri celebrations simply atleast by all communities of tamilnadu
    so far only brahmins celebrate navarathri
    is it not the duty of WE HINDUS to spread the message of navarathri to our brothers and sisters of hindu religion...

    ReplyDelete