badge

Followers

Saturday 23 September 2017

துக்க நிவாரண அஷ்டகம்.....








மங்கள ரூபிணி மதியணி சூலினி மன்மத பாணியளே;

சங்கடம் நீக்கிடச் சடுதியில் வந்திடும் சங்கரி சௌந்தரியே;

கங்கண பாணியன் கனிமுகங் கண்டநல் கற்பக காமினியே;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி;



கானுறு மலரெனக் கதிர்ஒளி காட்டிக் காத்திட வந்திடுவாள்; தானுறு தவஒளி தாரொளி மதியொளி தாங்கியே வீசிடுவாள்;

மானுறு விழியால் மாதவர் மொழியாள் மாலைகள் சூடிடுவாள்;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

சங்கரி சௌந்தரி சதுர்முகன் போற்றிடச் சபையினில் வந்தவளே;

பொங்கரி மாவினில் பொன்னடி வைத்துப் பொருந்திட வந்தவளே;

எங்குலத் தழைத்திட எழில்வடி வுடனே எழுந்தநல் துர்க்கையளே;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

தணதண தந்தண தவிலொளி முழங்கிடத் தண்மணி நீ வருவாய்;

கணகண கங்கண கதிர்ஒளி வீசிடக் கண்மணி நீ வருவாய்;

பணபண பம்பண பறையொலி கூவிடப் பண்மணி நீ வருவாய்;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!




பஞ்சமி பைரவி பர்வத புத்திரி பஞ்சநல் பாணியளே;

கொஞ்சிடும் குமரனைக் குணமிகு வேழனைக் கொடுத்தநல் குமரியளே;

சங்கடம் தீர்த்திடச் சமரது செய்தநற் சக்தியெனும் மாயே;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

எண்ணிய படிநீ யருளிட வருவாய் எங்குல தேவியளே;

பண்ணிய செயலின் பலனது நலமாய்ப் பல்கிட அருளிடுவாய்;

கண்ணொளி யதனால் கருணையே காட்டிக் கவலைகள் தீர்ப்பவளே;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!

இடர்தரு தொல்லை இனிமேல் இல்லை யென்றுநீ சொல்லிடுவாய்;

சுடர்தரு அமுதே சுருதிகள் கூறிச் சுகமது தந்திடுவாய்;

படர்தரு இருளில் பரிதியாய் வந்து பழவினை ஓட்டிடுவாய்;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி!



ஜெயஜெய பாலா சாமுண் டீஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;

ஜெயஜெய துர்க்கா ஸ்ரீபர மேஸ்வரி ஜெயஜெய ஸ்ரீதேவி;

ஜெயஜெய ஜெயந்தி மங்கள காளி ஜெயஜெய ஸ்ரீதேவி;

ஜெயஜெய சங்கரி கௌரி க்ருபாகரி துக்க நிவாரணி காமாக்ஷி

No comments:

Post a Comment